தாயால் கைவிடப்பட்ட 4 மாத யானைக்குட்டி கந்தளாயில் மீட்பு
கந்தளாய் சீனிபுர இராணுவ முகாமிற்குப் பின்னால் தாயால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் நான்கு மாத டைய யானைக்குட்டியை வனவிலங்கு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் இந்தக் குட்டி யானையைக் கண்டதையடுத்து, உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
4 மாத யானைக்குட்டி
சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், முதலில் அந்தக் குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி மேலதிக பராமரிப்புக்காக கிரித்தலே வனவிலங்கு சரணாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri