மூன்று நாடுகளின் தூதுவர்கள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு (Photos)
சுவிட்சர்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் தூதுவர்களும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று(14.12.2023)இரவு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.
சிநேகபூர்வ கலந்துரையாடல்
இதன்போது சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், இந்த சந்திப்பில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
