இலங்கை விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகிறதா..! வெளிப்படுத்தப்படும் தகவல்
இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான செய்திகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் முன்னணி விமான நிலையமான கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உட்பட மூன்று இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் இலங்கை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் பொய்யானவை.
அத்தகைய பேச்சுக்கள் எதுவும் நடைபெறவில்லை. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், அத்தகைய கலந்துரையாடல் பற்றி எனக்குத் தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
