3,000 வேலைவாய்ப்பு: பெருந்தொகை சம்பளம்! பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு
பிரித்தானியாவின் சோமர்செட் (Somerset) பகுதியில் அமைந்துள்ள யோவில் (Yeovil) ஹெலிகொப்டர் தொழிற்சாலைக்கு, 100 கோடி பவுண்டுகள் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தத்தை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
இத்தாலிய நிறுவனமான லியோனார்டோவின் (Leonardo) கீழ் இயங்கும் இந்தத் தொழிற்சாலைக்கு, 23 புதிய பாதுகாப்பு ஹெலிகொப்டர்களைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
9,000 மறைமுக வேலைவாய்ப்பு
இதன் மூலம் நேரடியாக 3,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பும், மறைமுகமாக அதன் விநியோகச் சங்கிலியில் உள்ள 9,000 வேலைவாய்ப்புகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் வழங்கப்படாவிட்டால் தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எச்சரித்திருந்த நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோர் நேரடியாக தலையிட்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதால், இந்தத் திட்டத்தை முடக்கிவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது.
பாதுகாப்பு அமைச்சரின் வருகை இரத்து
இதற்கு முன்னதாக, பாதுகாப்பு அமைச்சரின் வருகை இரத்து செய்யப்பட்டதால் இந்த ஒப்பந்தம் தள்ளிப்போகுமோ என்ற அச்சம் நிலவியது.

ஆனால், தற்போது இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதால், விண்வெளித் துறை சார்ந்த தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1915ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க இந்தத் தொழிற்சாலையின் எதிர்காலம், அரசின் இந்த அதிரடி முடிவால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri