நாட்டில் மேலும் 23 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 23 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10-10-2021) நாட்டில் 23 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
30 முதல் 59 வயது வரையிலான வயதுப் பிரிவில் 5 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட வயதுப் பிரிவில் 18 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் பதிவான மரணங்களில் 11 பேர் ஆண்கள் எனவும் 12 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்கள் 13354 ஆக உயர்வடைந்துள்ளது.