கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 வயது இளைஞர் கைது! சோதனையில் சிக்கிய பெறுமதியான பொருள்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நேற்று(28.02.2026) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயது இளைஞர் கைது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசேட சோதனையொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவரை வழிமறித்துச் சோதனை செய்த போதே இந்தக் கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தேகநபரின் உடமைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 36 ஆயிரம் சிகரெட்டுகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அப்பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து இந்தச் சிகரெட் தொகுதியைக் கொண்டு வந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமும், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதிகள் தொடர்பிலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam