ஓமான் துறைமுகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்! வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்
ஹார்முஸ் கடல் எல்லையில் சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கப்பல்கள் செல்லும் முக்கிய வழிதடமாக அமைந்துள்ள வளைகுடா கடலில் ஹார்முஸ் கடல் எல்லையில் தற்போது வளைகுடா பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் கியாஸ், இதர சரக்கு கப்பல்கள் நங்கூரமிட்டு தரித்துள்ளன.
கடல் எல்லை வழியாக சென்றால் ஈரான் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அவ்விடத்திலேயே இருப்பதாக தெரியவருகின்றது.
முதலாம் இணைப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசந்தம் (Musandam) கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையத்தின்படி, ஓமானின் முசந்தம் (Musandam) கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான பலாவு (Palau) தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலாவ் மாநிலத்தின் கொடியின் கீழ் பயணித்த கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று ஊடக அறிக்கை கூறுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஓமானின் துக்ம் துறைமுகத்தை குறிவைத்து இரண்டு ட்ரோன் தாக்குதல்கள் சிறிது நேரத்திற்கு முன்பு நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓமானில் இலக்குகள் தாக்கப்பட்ட முதல் சம்பவம்
வளைகுடா நாடுகள் மீது தெஹ்ரான் நடத்திய தொடர்ச்சியான பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓமானில் அல்லது அதற்கு அருகிலுள்ள இலக்குகள் தாக்கப்பட்ட முதல் சம்பவமாக இந்த சம்பவங்கள் குறிப்பிடுகின்றன.

ஓமானி கடற்படை மற்றும் இராணுவம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கடல்சார் பாதுகாப்பு மையம் மேலும் கூறியுள்ளது.
புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் ஓமன் ஒரு முக்கிய மத்தியஸ்தராக இருந்து வருகிறது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam