ஈரான் அரசியலில் பெரும் மாற்றம்! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை கணித்த அமெரிக்க உளவுத்துறை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாகவே, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அதிகாரம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA) கணித்திருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஈரானின் அரசியலில் பெரும் மாற்றம்
சிஐஏ-வின் மதிப்பீட்டின்படி, 86 வயதான காமேனிக்குப் பிறகு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் (IRGC) சேர்ந்த தீவிர கடும்போக்குவாதிகள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்களால் ஈரானின் அரசியல் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இராணுவத் தலைவர்கள் நாட்டின் முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிகிறது.
தற்போதைய போர்ச் சூழல், ஈரானின் உள்நாட்டு அரசியலில் கடும்போக்குவாதிகளின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri