படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

Batticaloa Jaffna Mullaitivu Sri Lanka Journalists In Sri Lanka
By Kajinthan May 31, 2024 08:19 PM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்(Aiyathurai Nadesan) 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

ஊடகங்களும் பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: ஈஸ்வரபாதம் சரவணபவன்

ஊடகங்களும் பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: ஈஸ்வரபாதம் சரவணபவன்


நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம்(Jaffna) பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(31.05.2024) இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு உருவப்படத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடரேற்றபட்டுள்ளது.

20th-commemorative-event-slain-journalist-natesan

தொடர்ந்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

20th-commemorative-event-slain-journalist-natesan

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (31.05.2024) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

20th-commemorative-event-slain-journalist-natesan

இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

மட்டக்களப்பு

மட்டக்களப்பில்(Batticaloa) படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (31.05.2024) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றுள்ளது.

காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

20th-commemorative-event-slain-journalist-natesan

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரத்தினம், இ. பிரசன்னா, இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமஹே, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

20th-commemorative-event-slain-journalist-natesan

முல்லைத்தீவு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு(Mullaitivu) ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (31.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

20th-commemorative-event-slain-journalist-natesan

ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களால் சுடரேற்றி மலர்தூவி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2004 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதியன்று தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில் வீதியில் வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்  ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையிலும் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை கடற்கரை பகுதியில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.

20th-commemorative-event-slain-journalist-natesan

இந்நிகழ்வில், ஐயாத்துரை நடேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் சேவை தொடர்பில் சிறப்புரையும் நடைபெற்றுள்ளது.

20th-commemorative-event-slain-journalist-natesan

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் முதன்முறையாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

20th-commemorative-event-slain-journalist-natesan

பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூடுக்கு இலக்கான 9 வயது சிறுமி

பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூடுக்கு இலக்கான 9 வயது சிறுமி

கொழும்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தமிழர் கைது

கொழும்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தமிழர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US