மே 9 ஐ மீண்டும் உருவாக்கி விட வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் போலே மீண்டும் ஒரு வன்முறையை உருவாக்கிவிட வேண்டாம் என எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணயிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மீண்டும் அவ்வாறான ஒரு பிரச்சினை உருவாகாமல் இருப்பதற்கு தான் தாம் கொழும்பில் மக்களுக்கு தெளிவு படுத்தல் கருத்தரங்கை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தக் காரணம் கொண்டும் அநீதிக்கு இடமளிக்க மாட்டோம் எனவும் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நாட்டின் ஜனாதிபதி மிக அழகாக சேவை செய்து கொண்டு இருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,