சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் திருத்தம்
இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை அண்மையில் திருத்தியுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட கட்டண விபரங்கள், 2025 நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2463/04 இன் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த அறிவிப்பின்படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் இலங்கை குடிமகன் ஒருவர், அதனை இலங்கைக்கு மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம்
இதே வகையினரின் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான கட்டணம் ரூ. 60,000 ஆகும். மேலும், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் ரூ. 45,000 எனவும், அதனைப் புதுப்பித்தல் அல்லது மீள வழங்குவதற்கான கட்டணம் ரூ. 15,000 எனவும் திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வருகையாளர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களும் அவற்றின் காலவரையறைகளுக்கு ஏற்ப இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இருவருக்கும் திருத்தப்பட்டுள்ளன.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam