2024 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதிவான வரலாற்று வெற்றி
2024 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியை வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இந்த போட்டி டெல்லி மைதானத்தில் நேற்று(17.03.2024) இடம்பெற்றது.
சகல விக்கெட்டுகளும் இழப்பு
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷஃபாலி வர்மா அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் அதிகபட்சமாக 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
வரலாற்று வெற்றி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எல்லிஸ் பெர்ரி அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி அந்த வெற்றியை பதிவு செய்து கனவை நனவாக்கியுள்ளதாக இரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Viral Video: இந்த பை போதுமா? திருமணம் முடிந்த கையோடு ஐயர் பார்த்த வேலை.. கேமராவில் சிக்கிய காட்சி Manithan

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ Cineulagam
