சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையின் 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனை பொது நிர்வாக அமைச்சு உறுதி செய்துள்ளது.
சுதந்திர தின நிகழ்விற்காக நிதி ஒதுக்கீடு
இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செலவுகளை குறைக்க முயற்சிக்கப்படும் எனவும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார போபகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 39 நிமிடங்கள் முன்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
