ஒரே ஓடுபாதையில் பயணித்த 2 விமானங்களினால் பதற்றம்
இந்தியாவில் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான வகையில் பயணித்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு விமானம் மற்றொரு விமானம் புறப்பட்ட அதே ஓடுபாதையில் தரையிறங்கிய காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் சனிக்கிழமை (09) அதிகாலையில் இந்தோரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் 6E 5053 ஓடுபாதையில் தரையிறங்கியுள்ளது.
தரையிறங்கும் மற்றும் புறப்படும் நேரத்தில் குழப்பம்
அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் AI657 திருவனந்தபுரம் சர்வதேசத்திற்கு புறப்படும் பணியில் இருந்த நிலையில், விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படுவதற்கான நேரத்தில் குழப்பமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 3 மணி நேரம் முன்

IQ Test: இரண்டில் ஏழை குடும்பம் எது? மூளையை சலவைச் செய்து கண்டுபிடிங்க.. 5 வினாடிகள் மட்டுமே! Manithan

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
