இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை (Sri Lanka), இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 17 பேர் 6 படகுகளுடன் இருநாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (16.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது .
5 படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவின் காரைக்கால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காரைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இயந்திரக் கோளாறு
இதேவேளை தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிப்பட்டின கடற்றொழிலாளர்கள் மூவர் பயணித்த படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மாதகல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய படகில் பயணித்த மூன்று தமிழக கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri