சுரேஷ் சலேயின் உளவு இரகசியங்களால் திணறும் பலர்! பிள்ளையானுக்கு புதிய நெருக்கடி
சுரேஷ் சலே தனது மடிகணினி மற்றும் கைபேசிகளின் கடவுச்சொற்களை (passwords) வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவரது 38 வருட உளவுத்துறை ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
உதய கம்மன்பில இந்த விசாரணை மற்றும் கடவுச்சொற்களைக் கோருவதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று விமர்சித்துள்ளார்.
அவர் சுரேஷ் சலேயின் மன உறுதியைப் பாராட்டியும், விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் என்றும் குறிப்பிடுகிறார்.
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிள்ளையான் தன்னை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், நீதிமன்றக் கூண்டில் அவர் காட்டிய சைகைகள் நீதிமன்ற அவமதிப்பு விவகாரமாகப் பேசப்படுகிறது.
இந்த விசாரணைகளை அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முதலாம் எதிரியான ராஷித் முகமத் பாய்ஸுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து மற்றும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறைச்சாலைகளில் உள்ள சந்தேக நபர்களைச் சந்திப்பதும், சமூக வலைதளங்களில் விசாரணைகளை விமர்சிப்பதும் வழக்கை திசைதிருப்பும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்குகள் எங்கே செல்லும் மற்றும் நீதிமன்றம் இது தொடர்பாக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது ஒரு விடை தெரியாத புதிராகவே இருப்பதாக உள்ளது.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam