பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் 17 பேர் பலி
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் விமானப்படை விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
85 இராணுவத்தினருடன் பயணித்த விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,விபத்துக்குள்ளான விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் பயணித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தெற்கே, ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜோலோ தீவில் தரையிறங்க முற்பட்டபோது விபத்து சம்பவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,