15 கோடி ரூபா சட்டவிரோத சொத்து விவகாரம்: மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(16.3.2026) அழைக்கப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அமைச்சராகப் பணியாற்றிய போது தனது சட்டபூர்வமான வருமானத்தை மீறி, சுமார் 150 மில்லியன் (15 கோடி) ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமாக ஈட்டியதாக மேர்வின் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இன்றைய வழக்கு விசாரணையின் போது, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வழிநடத்தலின் கீழ் வழக்கின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் சாட்சிப் பதிவுகள் தற்போது தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்து வேலை..! பொது மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படும் - அமைச்சர் தகவல்
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan