134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!
அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் இயங்கி வந்த பாரிய இணையவழி மோசடி வலையமைப்பொன்றை இலக்கு வைத்து நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இப்பகுதிகளில் உள்ள ஐந்து தங்குமிட விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் தீவிரம்
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் விவரம் வருமாறு, சீன நாட்டவர்கள்: 126 பேர்
மியான்மர் நாட்டவர்கள்: 4 பேர்
தாய்வான் நாட்டவர்கள்: 4 பேர்
சந்தேகநபர்கள் தங்கியிருந்த விடுதிகளில் இருந்து இணையவழி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பெருமளவிலான மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காகக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri