சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா காலமானார்
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று காலமானார்.
மருதமுனையைச் சேர்ந்த உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று கடந்த ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் இன்று நண்பகல் 12 மணியளவில் காலமானார்.
உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.
2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஒன்பதாவது பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் . எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.
சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்த வேளையில் இன்று காலமானார்.
அன்னாருக்கு சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் - கவ்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri