தீவிரமடைந்துவரும் ரஷ்ய தாக்குதல்: வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ள ஜெலென்ஸ்கி
ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) தமது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மீதான தாக்குதலை சமீப நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் மேலும் இரண்டு குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
வான்வழித் தாக்குதல்
அத்துடன் Zaporizhzhia பிராந்தியத்தில் ஒரு குடியிருப்பு பகுதியையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் பயணங்களை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு முக்கிய விமான நிலையங்களை ரஷ்யா மூடியுள்ளது.
உக்ரைனியப் படைகள் சமீபத்திய வாரங்களில் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
