மஹரகம பகுதியில் இளைஞர்கள் போராட்டம்!முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இளைஞர் மாநாட்டு சங்கத்தின் மீது கை வைக்காதே என வலியுறுத்தி மஹரகம பகுதியில் இளைஞர்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(6) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
இது தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இளைஞர் கழகம் நடாத்தப்படுகின்றது.
தற்போது அந்த நடவடிகக்கை மாற்றப்பட்டு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இந்த கழகம் நடாத்தப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
இது எமது உரிமைகளை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
