வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா - ஓமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதமானது ஓமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்தபோது தண்டவாளப் பகுதியில் பயணித்த இளைஞர் மீது மோதியுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டம் 6 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் ஓமந்தை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam
