கிளிநொச்சியில் பாதையை புனரமைக்க ஒன்று திரண்ட இளைஞர்கள்
கிளிநொச்சி கண்டவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் அமைந்துள்ள பாலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரம் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு கிரவல் மூலம் இன்றைய தினம் (16.07.2023) இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் தமது சொந்த நிதியினையும்,நேரத்தினையும், ஆளணியையும் பயன்படுத்திச் சேதமடைந்த பகுதிகளைப் புனரமைப்பு செய்துள்ளனர்.
புனரமைப்பு பணிகள்
கிளிநொச்சி கண்டவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியில் அமைந்துள்ள பாலமானது சில வருடகாலமாகப் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால் மக்கள் தற்காலிக பாதையினை பயன்படுத்தி வந்தனர்.
குறித்த தற்காலிக பாதையும் மக்கள் பயணிக்கமுடியாத நிலையில் சேதமடைந்துள்ளது.
மேலும், பாலத்தின் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்து தருமாறு பல தடவைகள் முறையிட்டபோதும் திருத்தப்படவில்லை.
இந்த நிலையில் இந்த இளைஞர்களின் பாலம் புனரமைப்பு செய்தமைக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
