வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மந்திகை மடத்தடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சை
அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிககப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன், நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
விசாரணைகள்
அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிரணவன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri
