பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை
மொரட்டுவையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த 23 வயதான யுவதியை வாட்ஸ்அப் மூலம் துன்புறுத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயதுடைய விற்பனை ஆலோசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை
பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் தனக்கு மோசமான காணொளி மற்றும் அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய குறுஞ்செய்திகள் தொடர்ச்சியாக வருவதாக கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நடிகா திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri