வவுனியாவில் இளம் தாயும் இரு பிள்ளைகளும் மாயம்: கணவன் முறைப்பாடு
வவுனியா - கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி,பிள்ளைகளான கம்சனா (வயது 11), சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் மனைவியும் வீடு திரும்பாத நிலையில் கணவரும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான தகவல் கிடைத்தோர் 076-5273860 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
