கைதிகளின் வன்முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் - குடும்பத்தின் பரிதாப நிலை

Negombo Death Prison
By Vethu Jul 09, 2026 05:55 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் இளம் வயதுடையவர்கள என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த, புலத்சிங்கள - டெல்மல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரி தர்ஷன தரங்க அதுகோரலவின் இழப்பு, அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற எந்தவொரு தீய பழக்கவழக்கங்களும் இல்லாத மிகவும் கனிவான குணம் கொண்ட மகன், கைதிகளிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்வார் என அவரது தாயார் கருணாவதி பெரேரா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை

அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை

அதிர்ச்சியில் குடும்பம்

அப்பாவி மக்களின் கஷ்டங்கள் குறித்து எப்போதும் கவலைப்படும் தர்ஷனவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான தர்ஷன தரங்க, 3 ஆண்டுகளுக்கு முன்பு அஷினி குமுதுமாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கைதிகளின் வன்முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் - குடும்பத்தின் பரிதாப நிலை | Young Police Officer Dies In Negombo Riot  

உயிரிழக்கும் போது ஏழு மாதக் குழந்தை ஒன்றின் தந்தையாக அவர் இருந்துள்ளார். தர்ஷன பணி புரியும் போது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்ததும், தாயார் பலமுறை அவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவரது மனைவி மூலம் அவர் அவசர பணி நிமித்தமாக நீர்கொழும்பு சென்றிருப்பதாக அறிந்துக் கொண்டுள்ளார்.

மகன் உயிரிழந்த செய்தியை கேட்டுத் தந்தை கருணாசிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் டெங்கு ஆபத்து - ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் டெங்கு ஆபத்து - ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை

உடனே பதவி விலகுங்கள்! - நீதி அமைச்சருக்கு எதிரணி கடும் அழுத்தம்

உடனே பதவி விலகுங்கள்! - நீதி அமைச்சருக்கு எதிரணி கடும் அழுத்தம்

உயிரிழந்த அதிகாரிகளின் நிலை

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நன்கு பயிற்சி பெற்ற விசேட படைப்பிரிவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளே இவ்வாறு நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் Prison Special Tactical Unit/Prison Emergency response strategic unit எனப்படும் சிறைச்சாலைகள் துரித தாக்குதல் மற்றும் தந்திரோபயப் படையணியைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளே கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

கைதிகளின் வன்முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் - குடும்பத்தின் பரிதாப நிலை | Young Police Officer Dies In Negombo Riot

குறித்த படையணியானது பொலிஸ் விசேட அதிரடிப்படை போன்ற நன்கு பயிற்சி பெற்ற ஒரு சிறைச்சாலைப் படைப் பிரிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் முக்கிய பொறுப்புக்கள்

சிறைச்சாலைகளில் ஏற்படும் கைதிகளின் கடுமையான மோதல்கள், கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை துரித கதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டல், சிறைச்சாலைகளினுள் போதைப் பொருள் மற்றும் கைபேசி பாவனைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், அவ்வாறானவர்களிடம் இருந்து எதிர்கொள்ள நேரிடக் கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், சிறைச்சாலையினும் நிகழும் விடயங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல், அச்சுறுத்தல் ஏற்படும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

கைதிகளின் வன்முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் - குடும்பத்தின் பரிதாப நிலை | Young Police Officer Dies In Negombo Riot

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அனுப்பப்பட்ட குறித்த படையணியின் முதலாம் தர ஜெயிலர் சந்திரவங்ச, சார்ஜண்ட் தர அதிகாரிகளான சஞ்சீவ, என்.தரங்க, புஷ்பகுமார, திலகசிறி, அபேவர்த்தன, ஏ.டி. தரங்க உள்ளிட்ட அதிகாரிகளே நீர்கொழும்பு கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அதிகாரிகளின் சடலங்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காக அவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மேலதிக தகவல் - அனதி

you may like this video


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US