ஆற்றில் பாய்ந்த யுவதியின் உயிரை காப்பாற்றிய இளைஞன்
கலவானை பகுதியில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த யுவதியை இளைஞரொருவர் ஆற்றில் குதித்து காப்பாற்றியுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி கலவானை, துனுமகலவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கலவானை - மத்துகம பிரதான வீதியில் உள்ள குக்குலே ஆற்றுப்பாலத்தில் இருந்து யுவதி ஆற்றில் குதித்ததை கண்ட இளைஞன் தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார்.
யுவதி பொலிஸாரால் கைது
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக யுவதி கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நாட்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
