வலுக்கட்டாயமாக பூஜை செய்ய முற்பட்ட கும்பலை தடுத்த தாய் - மகனுக்கு நேர்ந்த கொடூரம்
வவுனியா - ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூஜை செய்ய முயன்றதை தட்டிக் கேட்ட தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(06.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூஜை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலைச் செய்யப்பட்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அந்த குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாயார் வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த தாயார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஓமந்தை, நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவரது இடத்தைக் காட்டிக் கொடுத்த சுரேஷ் சாலே! ஒரு அறைக்குள் இருந்த 7 சிசிடிவி கமராக்கள்
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan