மகாவலி ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்
கண்டி - பேராதணைப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞர் ஆற்றில் குதித்த இடத்திலிருந்து பயண பையொன்று மீட்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை, மடிக்கணினி, 2 வங்கி அட்டைகள், பரீட்சை நுழைவுச்சீட்டு, பணப்பை மற்றும் ஒரு ஜோடி காலணி என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று(28) தெரிவித்துள்ளது.
தேடுதல் பணி
காணாமல் போனவர் புலகஹாபிட்டிய - அஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் பொலிஸார், கடற்படையின் உயிர்காக்கும்
படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பேராதணைப் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 46 நிமிடங்கள் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
