வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த மகேந்திரா பட்டா ரக வாகனம் வவுனியா விவசாய பண்ணை முன்பாக பயணித்துக் கொண்டிருந்த போது கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டது.
இதன்போது வவுனியா நகரில் இருந் ஏ9 வீதி ஊடாக ஓமந்தை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam