வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த மகேந்திரா பட்டா ரக வாகனம் வவுனியா விவசாய பண்ணை முன்பாக பயணித்துக் கொண்டிருந்த போது கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டது.
இதன்போது வவுனியா நகரில் இருந் ஏ9 வீதி ஊடாக ஓமந்தை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
