சொகுசு காருடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி - தனமல்வில பகுதியில் இருந்து கிடைத்த இரகசிய தகவல்
தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை, புத்தளம் - சிலாபம் வீதியில் பத்துலு ஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தம்பதியினரின் சொகுசு காரில் 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இளம் தம்பதியினர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 26 வயது ஆணும், 22 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள், தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டது என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளம் தம்பதியினர், இன்று(10.08.2026) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO