திருமண நிகழ்வுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் மரணம்
காலியில் சதுப்பு நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய, படபொல பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கரந்தெனிய மண்டகந்த பகுதியை சேர்ந்த தனுஷ்க குணவர்தன என்ற 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு
படபொல, கொண்டகல பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 16 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

எனினும் தனது மகன் இன்று வரை வீடு திருப்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தாயார் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் குறித்து படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan