இரண்டாவது மகன் யோசித்த, நாட்டை விட்டு வெளியேறினார்! மகிந்தவின் அரசியலில் முக்கிய நாள்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது மனைவி இன்று அதிகாலை 12.55அளவி்ல் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யோஷிதாவும் அவரது மனைவியும், கட்டுநாயக்க வானுார்தி தளத்தின் ஊடாக வெளிநாட்டுக்கு சென்றபோதும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.
தமது தந்தையான மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரா இல்லையா என்பது குறித்து ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யோஷித நாட்டை விட்டு வெளியேறுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்ததன் அடிப்படையில் தமது தீர்மானத்தை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri