பரந்துபட்ட கூட்டணி மூலம் தேர்தலை சந்திப்போம்: சம்பிக ரணவக
எதிர்வரும் தேர்தல்களை பரந்துபட்ட கூட்டணியொன்றின் ஊடாக சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
பெந்தர பிரதேசத்தில் நேற்று(27.01.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம். அதற்காக எதிர்காலத்தில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
எங்களது கூட்டணி மூலமாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருத்தமான செயற்திட்டங்களை வகுத்துக் கொள்ள உத்தேசித்துள்ளோம்.
அதனை பொதுமக்கள் முன் சமர்ப்பித்து அதற்கான மக்கள் ஆணையை தேர்தல்களில் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம்.
எங்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் அது குறித்து நிச்சயம் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
