இலங்கையில் உலகத்தர காற்பந்தாட்ட மைதானம்
நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை இலங்கையில் அமைக்க உதவுவதாக ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிபா உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அல் கலிபா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவை நேற்று(03.04.2025) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஆசிய நாடுகள் பல பொருளாதார ஊழல்களை எதிர்கொண்ட போதிலும் இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் ஊழலற்ற செயற்பாடுகள் சிறப்பாக இருப்பதாக அல் கலிபா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத் திட்டம்
இதன் விளைவாக இலங்கையில் காற்பந்து மிக சிறந்த நிலையை எட்டும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் நவீன காற்பந்தாட்ட மைதானத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பிலும் சுனில் குமார கமகேவுடன் அல் கலிபா கலந்துரையாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri
