கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கொடித்தோடை செய்கை திட்டம் தோல்வி
கிளிநொச்சி மாவட்டத்தில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கொடித்தோடை செய்கை பயனற்றுப் போயுள்ளதுடன் இதில் பெருந்தொகையான நிதி இழக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று(17) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் (ASMP) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள கொடித் தோடை செய்கை எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்றும் கொடித்தோடை கொள்வனவு மற்றும் பதப்படுத்தலுக்காக செயற்பட்டு வந்த விற்பனை நிலையமும் முழுமையாக செயலிழந்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி
அதாவது அன்னியச் செலவாணியை பெற்றுக் கொள்ளும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கொடித்தோடைச் செய்கை பயனற்று போயுள்ளதாக ஏற்கனவே பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டி இருந்தன.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட திட்டத்திற்கான உபகரணங்கள் நீர் பம்பிகள் உள்ளிட்ட பெருந்தொகையான உள்ளீடுகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்த போதும் இதனைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் உரிய செய்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டம்
இதேவேளை கொடி தோடை கொள்வனவு மற்றும் பதப்படுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு அக்கராயன் குளம் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட விற்பனை மற்றும் சேகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டு செயலிழந்துள்ளது.
இதற்கென வழங்கப்பட்ட பலமில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களும் பயன்பாடின்றி இருப்பதாகவும் அதன் பயனாளிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு விவசாய திட்டங்கள் இவ்வாறு உரிய கண்காணிப்புகள் மற்றும் உரிய பொறி முறைகள் இன்றி செயலிழந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
