உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு வாகன பேரணி (VIDEO)
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவுகூரப்படும் நிலையில் அதனை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வவுனியா பொது
வைத்தியசாலையின் மாவட்ட பாலியல் நோய்த்தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில்
இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் குருமன்காட்டுசந்தி ஊடாக, வைரவபுளியங்குளம் சென்று, வவுனியா நகரம் ஊடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் காலை10 மணிக்கு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் நடைபெற்றிருந்தது.
குறித்த செயலமர்வில் வைத்தியசாலை பணிப்பாளர் இ.ராகுலன், விசேட வைத்திய நிபுணர் இளங்குமரன், மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri