கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு நடைபெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு நேற்று (31) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
கருப்பொருள் சார்ந்த போலியான தகவல்களுக்கு எதிராக செயல்படுதல், வெளிநாட்டு செய்திகளை பயன்படுத்தல் மற்றும் தலையீடு செய்தல் ஆகிய விடயங்கள் சார்ந்த தெளிவுபடுத்தலை உருவாக்கும் பயிற்சி திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.
செயலமர்வு
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களுக்கான குறித்த பயிற்சி செயலமர்வில், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







