ரணில் ஆட்சியின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை: விமல் வீரவன்ச பகிரங்கம்
"இலங்கையில் அடுத்துவரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை மேலவை இலங்கை கூட்டமைப்பாகவே நாம் எதிர்கொண்டு அதிரடி காட்டுவோம்." என கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கூட்டணியின் போட்டி

மேலவை இலங்கை கூட்டமைப்பின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்று(19.09.2022) நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மொட்டு, யானை ஆட்சி

அவர் மேலும் தெரிவித்ததாவது,"சர்வகட்சி அரசை அமைக்குமாறு கோரினோம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. மொட்டு, யானை ஆட்சியே தொடர்கின்றது. அந்த ஆட்சியின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மட்டுமல்ல அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக
இருந்தாலும் எமது கூட்டணி போட்டியிடும்" என தெரிவித்துள்ளார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri