ரணில் ஆட்சியின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை: விமல் வீரவன்ச பகிரங்கம்
"இலங்கையில் அடுத்துவரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை மேலவை இலங்கை கூட்டமைப்பாகவே நாம் எதிர்கொண்டு அதிரடி காட்டுவோம்." என கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கூட்டணியின் போட்டி

மேலவை இலங்கை கூட்டமைப்பின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்று(19.09.2022) நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மொட்டு, யானை ஆட்சி

அவர் மேலும் தெரிவித்ததாவது,"சர்வகட்சி அரசை அமைக்குமாறு கோரினோம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. மொட்டு, யானை ஆட்சியே தொடர்கின்றது. அந்த ஆட்சியின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மட்டுமல்ல அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக
இருந்தாலும் எமது கூட்டணி போட்டியிடும்" என தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan