விமல் தலைமையிலான புதிய கூட்டணி வெளியிட்டுள்ள அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு (Video)
எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மேலவை இலங்கை கூட்டணி போட்டியிடவுள்ளதாக கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18.09.2022) இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதோடு அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். ஆனால் தற்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இடம்பெறுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,