சதொச ஊழியர்களின் பொறுப்பற்ற செயல் : பொதுமக்கள் விசனம்(Video)
வவுனியா நகர சதொச கிளையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் பெண் முக
கவசமின்றி கடமையில் ஈடுபட்டுள்ளதால், பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று (10) காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் அங்கு பணிபுரியும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் முக கவசத்தினை தனது உடையில் வைத்துள்ள நிலையில் பொலிஸாருக்கு முன்பாகவும் முக கவசமின்றியே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்கள், குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முக கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் விடயம் தொடர்பில் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam