அவளுடைய பலம், நாட்டிற்கு முன்னேற்றம்..! மண்முனையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வுகள்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகள் "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நேற்று (05.03.2024) தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் மகளிர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல நிகழ்ச்சித்திட்டங்கள் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வின் விருந்தினர்கள்
அதேவேளை, இந்த நிகழ்வின் விருந்தினர்களாக சமதை பெண்நிலைவாத நண்பிகள் மற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |