சிரியாவின் ஏவுகணை கிடங்கு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
சிரியாவின் லடாகியா பகுதியில் உள்ள ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (ஐ.டி.எப்.) திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த இடத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஒருவர் பலியாகி உள்ளார் என கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஏவுகணைகள் இந்த கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.
ஏவுகணை தாக்குதல்
நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன.
இந்த பகுதியில், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்யும்.
இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்பட கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபடும் என அதுபற்றி இஸ்ரேல் படைகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 18 மணி நேரம் முன்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

பாரதி கண்ணம்மா-னு டைட்டில் மாத்திடுங்க.. சின்ன மருமகள் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் Cineulagam
