தேசிய ரீதியில் சாதித்த மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து
தேசிய ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில்,
“திங்கட்கிழமை (04) கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான (U20) பிரிவு II இற்கான காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியினை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த குறித்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்களிப்புக்கள்
மாணவர்களை வழிநடாத்திய பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், திருகோணமலை மாவட்ட பாடசாலைகள் தேசிய ரீதியில் பல சாதனைகளை நிகழ்ந்த வேண்டும் எனவும் அதற்கு தன்னால் முடிந்த அனைத்து பங்களிப்புக்களையும் வழங்க தயாராக இருக்கிறேன் என்றும்” அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 23 மணி நேரம் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
