கொழும்பில் பணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
கொழும்பு, சேதவத்தை, பாலத்திற்கு அருகில் களனி கங்கையில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர் என சந்தேகிப்பதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலத்தில் எவ்வித காயங்களும் இல்லை. அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் 1200 ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்து வந்துள்ளது. பின்னர் நேற்று சேதத்தை களு பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan