கொழும்பில் பணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
கொழும்பு, சேதவத்தை, பாலத்திற்கு அருகில் களனி கங்கையில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர் என சந்தேகிப்பதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலத்தில் எவ்வித காயங்களும் இல்லை. அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் 1200 ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்து வந்துள்ளது. பின்னர் நேற்று சேதத்தை களு பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan
8 ஆண்டுகள் காதல், லிவ்-இன் உறவு.. திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா டெமெட்ரியஸ் Cineulagam