மட்டக்களப்பில் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07.12.2022) பதிவாகியுள்ளது.
விவேகானந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை நீலாம்பிக்கை (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மக்கள் கோரிக்கை
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையினை காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.