உலக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி

Kandy Hospitals in Sri Lanka Doctors
By Vethu Jul 10, 2026 06:39 AM GMT
Report

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று இந்த வரலாற்று சாதனைமிக்க சிகிச்சையை வழங்கியுள்ளனர்.

ஒரு குழந்தைக்கு மட்டும் இருந்த 2 சிறுநீரகங்களில் ஒன்றைப் பிரித்தெடுத்து, மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றும் சத்திரசிகிச்சையும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்

உலக வரலாற்றில் முதன்முறையாக சத்திர சிகிச்சை  

இவ்வாறான ஒரு சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரும், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உலக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி | Conjoined Twins Separated By Surgery After 5 Years

மாவனெல்ல தாயொருவருக்கு 2021 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இந்த இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கமைய சிறுநீரகங்களின் செயற்பாடு சீரானது.

இந்த நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 10 ஆம் திகதி இவர்கள் பிரித்தெடுக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சைக்காக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்ட நேரம் குழந்தைகள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளின் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் மூளை ஆகியவற்றின் சீரான செயற்பாடே இந்த வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர் அஷானி ரத்நாயக்க, குறிப்பிட்டார்.

இடுப்புப் பகுதியில் அசாதாரணமான அமைப்பு

சத்திரசிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த குழந்தைகள், அடுத்த சில நாட்களில் சாதாரண விடுதிக்கு மாற்றப்படவுள்ளனர்.

உலக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி | Conjoined Twins Separated By Surgery After 5 Years

இடுப்பு பகுதியில் இணைந்திருந்த குழந்தைகளை பிரிக்கும் சத்திர சிகிச்சை இலங்கையில் இதுவரை ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலையில், ஒரு குழந்தையிலிருந்து சிறுநீரகத்தைப் பெற்று மற்றைய குழந்தைக்கு பொருத்தி அவர்களைப் பிரிக்கும் இத்தகைய சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உடல் எடை அறுவை சிகிச்சைக்கு ஏதுவான நிலையை அடையும் வரை சுமார் 5 ஆண்டுகள் காத்திருந்த பின்னரே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகளின் இடுப்புப் பகுதியில் அசாதாரணமான அமைப்பு காணப்பட்டுள்ளது. கால்கள் குறுக்காக அமைந்திருந்தது. தலைக்கு ஒப்பான நிலையில் கால்கள் 90 பாகை கோணத்தில் அமைந்திருந்ததால், கால்களுக்குச் செல்லும் நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குழந்தைகளைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக அமைந்ததாக சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையின் எலும்பு சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகலங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சத்திரசிகிச்சைக்காக 15 விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

குழந்தைகள் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் சில சத்திரசிகிச்சைகள் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அரசியல்வாதியின் திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்

அரசியல்வாதியின் திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

you may like this video

 

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US