8 வயது இலங்கை சிறுவனுடன் சிக்கிய வெளிநாட்டு பெண்! கடவுச்சீட்டு அலுவலகத்தில் சிக்கிய மர்மம்
மலேசிய குடிவரவு அலுவலகத்தில் 8 வயது இலங்கை சிறுவனுக்கு மலேசிய கடவுச்சீட்டை சட்டவிரோதமாகப் பெற முயன்றதற்காக 30 வயது மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில், அந்தப் பெண் சிறுவனுடன் கடவுச்சீட்டு கவுண்டருக்குச் சென்று கடவுச்சீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு அதிகாரிகள்
நேர்காணல் செயல்பாட்டின் போது, சிறுவனின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவரது பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் குறித்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதால் குடிவரவு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
அதிகாரிகளின் தொடர் கேள்விகளுக்கு, சிறுவன் தொடர்ந்து தவறான பதில்களை அளித்ததால், சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
குடிவரவுத் துறையின் அறிக்கைக்கமைய, கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் நோக்கம் குறித்து அந்தப் பெண் முரண்பாடான மற்றும் சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணும் சிறுவனும் மேலதிக விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சட்டவிரோத செயல்
விசாரணைகளில் பின்னர் அந்தப் பெண்ணுக்கு சிறுவனுக்கு குடும்ப உறவு இல்லை என்பதும், கடவுச்சீட்டு விண்ணப்ப முயற்சிக்கு தயாராவதற்காக அவருடன் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது.

அந்தப் பெண் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க அல்லது பயண ஆவணங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பது மலேசிய சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam